வான்சிறப்பு

திருக்குறள் 20 – நீர்இன்று அமையாது| அதிகாரம் 2 – வான்சிறப்பு

பால்: அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம் 2: வான்சிறப்பு குறள் 20 நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்வான்இன்று அமையாது ஒழுக்கு விளக்கம் எவராயினும்‌ நீர்‌ இல்லாமல்‌ உலக வாழ்க்கை நடைபெறாது என்றால்‌, மழை இல்லாமல்‌ ஒழுக்கமும்‌ நிலைபெறாது‌. சொற்பொருள் நீர்இன்று – நீர் இன்றிஅமையாது – நிகழாதுஉலகெனின் – உலகம் எனின்யார்யார்க்கும் – எவராயினும்‌வான்இன்று – வான்மழை இன்றிஅமையாது – நிலைபெறாது‌ஒழுக்கு – ஒழுக்கம் Section: Virtue Category: Introduction Chapter 2: The Excellence of […]

திருக்குறள் 20 – நீர்இன்று அமையாது| அதிகாரம் 2 – வான்சிறப்பு Read More »

திருக்குறள் 19 – தானம் தவம்இரண்டும்| அதிகாரம் 2 – வான்சிறப்பு

பால்: அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம் 2: வான்சிறப்பு குறள் 19 தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்வானம் வழங்கா தெனின் விளக்கம் மழை பெய்யவில்லை எனில்‌, இந்தப்‌ பெரிய உலகத்தில்‌ பிறர்பொருட்டுச்‌ செய்யும்‌ தானமும்‌, தம்‌ பொருட்டுச்‌ செய்யும்‌ தவமும்‌ இல்லாமல் போகும்‌. சொற்பொருள் தானம் – பிறர்க்குக் கொடுத்தல்தவம் – சுய ஒழுக்கம்தானம் – தானம், தவம் ஆகிய இரண்டும்தங்கா – இல்லாமல் போகும்வியன்உலகம் – விரிந்த உலகம்வானம் – விசும்புவழங்காது – மழையைப் பொழியாதுஎனின் –

திருக்குறள் 19 – தானம் தவம்இரண்டும்| அதிகாரம் 2 – வான்சிறப்பு Read More »

திருக்குறள் 18 – சிறப்பொடு பூசனை | அதிகாரம் 2 – வான்சிறப்பு

பால்: அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம் 2: வான்சிறப்பு குறள் 18 சிறப்பொடு பூசனை செல்லாது வானம்வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு விளக்கம் மழை பெய்யாமல்‌ வறண்டுபோனால் இவ்வுலகத்தில்‌ வானோர்க்காக சிறப்புடன் நிகழும் திருவிழாவும்‌ நடைபெறாது; நாள்‌ வழிபாடும்‌ நடைபெறாது. சொற்பொருள் சிறப்பொடு – சிறப்போடு (வேற்றுமை உருபு ‘ஓடு’ என்பது சங்க காலத்தில் ‘ஒடு’ என்று பயன்படுத்தப்பட்டது; மேலும் விளக்கம் இங்கே..)பூசனை – வழிபாடுசெல்லாது – நடைபெறாதுவானம் – விசும்புவறக்குமேல் – மழை பெய்யாமல் வறண்டுபோனால்வானோர்க்கும் –

திருக்குறள் 18 – சிறப்பொடு பூசனை | அதிகாரம் 2 – வான்சிறப்பு Read More »

திருக்குறள் 17 – நெடுங்கடலும் தன்நீர்மை | அதிகாரம் 2 – வான்சிறப்பு

பால்: அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம் 2: வான்சிறப்பு குறள் 17 நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலிதான்நல்கா தாகி விடின் விளக்கம் மேகம் கடலிலிருந்து நீரை முகந்து அதனிடத்திலே பெய்யாமல் விடுமானால் பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும். சொற்பொருள் நெடுங்கடலும் – பெரிய கடலும்தன்நீர்மை – தன் நீர்த்தன்மை (வளம்)குன்றும் – குறையும்எழிலி – மேகம்தடிந்து – குறைத்துதடிந்தெழிலி – மேகம் முகந்து (கடலிலிருந்து நீரை)தான்நல்காது – மழையைப் பொழியாமல்ஆகி – இருந்துவிடின் –

திருக்குறள் 17 – நெடுங்கடலும் தன்நீர்மை | அதிகாரம் 2 – வான்சிறப்பு Read More »

திருக்குறள் 16 – விசும்பின் துளிவீழின் | அதிகாரம் 2 – வான்சிறப்பு

பால்: அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம் 2: வான்சிறப்பு குறள் 16 விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கேபசும்புல் தலைகாண்பு அரிது விளக்கம் வானத்திலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி, உலகத்தில் ஓரறிவு உயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது. சொற்பொருள் விசும்பின் – வானத்திலிருந்து (வேற்றுமை உருபு ‘இன்’ என்பது சங்க காலத்தில் ‘இலிருந்து’ எனும் பொருளில் பயன்படுத்தப்பட்டது; மேலும் விளக்கம் இங்கே..)துளிவீழின் – மழைத்துளி விழுந்தால்அல்லால் – அன்றிமற்று ஆங்கே – அத்துடன் அங்கேபசும்புல் – பசுமையான புல்தலைகாண்பு

திருக்குறள் 16 – விசும்பின் துளிவீழின் | அதிகாரம் 2 – வான்சிறப்பு Read More »

error:
Scroll to Top